கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு செல்லும் பக்தர்கள் பிப்ரவரி 6ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று விழா ஒருங்கிணைப்பாளர் பாதிரியார் சந்தியாகு தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு திருவிழா வருகின்ற பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கும் நிலையில் இரண்டாம் நாள் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் தங்களுடைய பெயர்களை பிப்ரவரி 6ஆம் தேதிக்குள் ராமேஸ்வரம் வேர்க்கோடு புனித ஜோசப் ஆலய நிர்வாகத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்திற்கு பத்து ரூபாய் மற்றும் படகில் செல்ல கட்டணமாக 2000 ரூபாய் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.