வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் தமிம் இக்பால் தனது ஓய்வு அறிவிப்பை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார்..

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடங்குவதற்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தமிம் இக்பால் தனது ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். நேற்று முன்தினம்  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வங்கதேசம் தோல்வியை தழுவியது. இந்நிலையில் தமீம் தனது ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் கண்ணீருடன் தனது ஓய்வை அறிவித்தார். ஐந்த  அறிவிப்பு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.“இது எனக்கு  முடிவு. எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினேன். அதற்காக முயற்சித்தேன். இந்த தருணத்தில் இருந்து நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.

 

இந்தப் பயணத்தில் என் மீது நம்பிக்கை வைத்த எனது சக வீரர்கள், பயிற்சியாளர்கள், வங்கதேச கிரிக்கெட் வாரியம் மற்றும் எனது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். என் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கும் ரசிகர்களுக்கு நன்றி. நீங்கள் தான் என் ஊக்கம். என் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்குகிறேன். அதற்கு உங்களின் பிரார்த்தனைகள் தேவை,” என்றார்.

இந்நிலையில்  வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் தமிம் இக்பால் தனது ஓய்வு அறிவிப்பை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார்.. ஆப்கானித்தான் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியுடன் ஓய்வு பெற்றதாக கூறிய நிலையில் அறிவிப்பை திரும்ப பெற்றார்.

34 வயதான தமிம் இக்பால் 2007 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். அவர் 70 டெஸ்ட், 240 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் மொத்தம் 15,205 ரன்கள் எடுத்துள்ளார். பங்களாதேஷ் அணியை 37 ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தி அதில் 21 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.