ஓபிஎஸ் திமுகவில் இணைந்து விட்டார் என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார். சட்டமன்றத்தில் முதலமைச்சரின் தனி தீர்மானம் குறித்து பேசிய அவர், ஓபிஎஸ் சூடு சொரணை இல்லாமல் பேசி வருகின்றார். பாஜகவில் இருந்து வெளியே வந்து விட்டோம். சிறுபான்மை வாக்கு அதிமுகவிற்கு வந்துவிட்டது. தேர்தலுக்கு கால அவகாசம் உள்ளது. தேர்தல் நேரத்தில் நல்ல கூட்டணி அமையும். திமுக ஆட்சி அவலங்களை எடுத்துச் சொல்லும். இதை மக்கள் நன்கு புரிந்து இருக்கின்றனர் என்று கூறினார்.