அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வருகிறார்.  இவரின் தாயார் ஓ.பழனியம்மாள் (95). இவர் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 22ஆம் தேதி இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்ததன் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று பழனியம்மாள்(95) உடல்நலக் குறைவால் காலமானார்.

இதற்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இவரின் மரணத்திற்கு சசிகலா ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அன்பு சகோதரர் ஓபிஎஸ் தாயார் மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். இழப்பை தாங்கிக்கொள்ள ஓபிஎஸ்-க்கு மன தைரியமும் சக்தியும் தர ஆண்டவனை வேண்டுகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.