அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வருகிறார்.  இவரின் தாயார் ஓ.பழனியம்மாள் (95). இவர் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 22ஆம் தேதி இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்ததன் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று பழனியம்மாள்(95) உடல்நலக் குறைவால் காலமானார்.

இதற்கு அரசியல் கட்சியினர் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் மறைவிற்கு ஈபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் யாரும் இதுவரை இரங்கல் தெரிவிக்கவில்லை. நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை என்றாலும் குறைந்தபட்சம் இரங்கல் அறிக்கை கூட வெளியிடவில்லை. சில மாதங்களுக்கு முன்பு ஓபிஎஸ் வீட்டிற்கு சென்ற ஈபிஸ்க்கு தாய் ஸ்தானத்தில் இருந்து பழனியம்மாள் விபூதி பூசி விட்டார். இதையெல்லாம் கூட நினைத்துப் பார்க்காத இபிஎஸ் இதுவரை இரங்கல் செய்தி தெரிவிக்கவில்லை. சமீபத்தில் இபிஸ்க்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.