பாஜக மற்றும் ஓபிஎஸ் அணி கூட்டணி தொடர்பான கேள்விக்கு அண்ணாமலை கோபமாக பதில் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓபிஎஸ்ஐ தாமரைச் சின்னத்தில் போட்டியிட வற்புறுத்துகிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, உங்களுக்கு இது தேவையா? நீங்கள் அரசியல் கட்சியை நடத்துகிறீர்களா? நாங்கள் பேசுவதை எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் சொல்வதை மட்டும் நீங்கள் வெளியிட்டால் போதும் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.