தமிழகத்தில்  ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்குகளை பெற பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி  செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் மாமல்லபுரம் பகுதிகளில் தேர்தலில் வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் கைவிரலில் வைத்த மை அடையாளத்தை காட்டினால் உணவங்களில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.