வருங்காலத்தில் மாதந்தோறும் வருமானம் பெற விரும்பினால் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் இணையலாம். இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய முடியும். இந்த திட்டமானது ஆண்டுக்கு 8.2% வருடாந்திர வட்டியை வழங்குகிறது. 30 லட்சம் ரூபாய் முதலீட்டுக்கு ஆண்டுக்கு 2.46 லட்சம் வட்டி கிடைக்கும்.

அதாவது மாதம்தோறும் 20500 பெறலாம். வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களை அணுகி ஒருவர் இந்த திட்டத்தில் தனியாக அல்லது மனைவியுடன் இணைந்து சேர்ந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு https://www.indiapost.gov.in/Financial/pages/content/post-office-saving-schemes.aspx என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.