தமிழகத்தின் நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் டெல்லி செய்தியாளர்களிடம் பேசியதாக கூறி ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 29 நொடிகள் கொண்ட ஆடியோவை சவுக்கு சங்கர் தன் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த ஆடியோவில் ஒரே வருடத்தில் உதயநிதி ஸ்டாலினும், ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் சேர்ந்து 30 கோடி ரூபாயை சம்பாதித்துள்ளனர்.

இந்த பணத்தை அவர்களுடைய மூதாதையர்கள் கூட சம்பாதிக்கவில்லை. இந்த பணத்தை அவர்கள் எப்படி கையாள போகிறார்கள் என்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று அந்த ஆடியோவில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆடியோவை சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள நிலையில் இது குறித்து அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இந்த ஒரு விளக்கமும் கொடுக்காமல் இருப்பது திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.