ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த 22ஆம் தேதி பைசாபாத் நகரில் இருந்து தென்கிழக்கில் 79 கிலோ மீட்டர் தொலைவில் காலை 9 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்தது.

இந்த நிலையில் அந்நாட்டில் இன்று காலை 6.47 மணிக்கு பைசாபாத் நகரில் இருந்து தென்கிழக்கில் 135 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளது என நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.