வாட்ஸ்அப் செயலியில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளைப் பயன்படுத்தும் வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பர்க் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ‘இதன்மூலம் பயனர்கள் ஒரே செயலியில் இரண்டு கணக்குகளை பயன்படுத்த முடியும்.

போனில் இரண்டு வாட்ஸ்அப் செயலிகள் வைத்திருக்க தேவை இல்லை’ என்றும் தெரிவித்துள்ளார். இந்த வசதி முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில் மற்ற பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.