அண்மை காலமாக தமன்னா நடித்த திரைப்படங்கள் எதுவும் வெளிவரவில்லை. இந்நிலையில் ரஜினியுடன் தமன்னா நடித்திருக்கும் ஜெயிலர், சிரஞ்சீவியுடன் தெலுங்கில் நடித்துள்ள போலா சங்கர் போன்ற 2 படங்கள் ஆகஸ்டு மாதம் திரைக்கு வர உள்ளது. இதன் காரணமாக தமன்னா இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார். இது தொடர்பாக தமன்னா கூறியதாவது “திரையுலகின் 2 சிகரங்களான ரஜினி, சிரஞ்சீவி போன்றோருடன் இணைந்து நான் நடித்திருக்கும் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது மகிழ்ச்சியாக உள்ளது.

நடிகர்கள் நடித்த 2 திரைப்படங்கள் அடுத்தடுத்த தினங்களில் ரிலீஸ் ஆவது அடிக்கடி நடக்கும். எனினும் கதாநாயகிகளுக்கு எப்போதாவது தான் அப்படி நடக்கும். தற்போது எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. ரஜினியுடன் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்டு 10-ம் தேதியும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் நடித்த போலா சங்கர் ஆகஸ்டு 11ம் தேதியும் வெளியாகவுள்ளது. 2 பிரபல நடிகர்களுடன் நான் நடித்திருக்கும் படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.