தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் ஜனவரி 7ஆம் தேதி நாளை முதல் ஜனவரி ஒன்பதாம் தேதி வரை விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 10ஆம் தேதி முதல் பொங்கல் பணம் ஆயிரம் ரூபாய், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்கப்படுகின்றது.

மேலும் அதே தேதியில் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. இதனால் ஒரே நாளில் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கிலும் ரேஷன் கடைகள் மூலம் ஆயிரம் ரூபாய் ரொக்கமாகவும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.