ஜனவரி 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை டோக்கனில் குறிப்பிட்ட நேரத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசான ரூபாய் 1000, வேட்டி மற்றும் சேலை, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்புடன் பொங்கல் தொகுப்பானது வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்நிலையில் இதற்காக அனைத்து ரேஷன் கடைகளிலும் நாளை முதல் டோக்கன் வழங்கப்பட உள்ளது. நாளை 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்பட உள்ளது..

அதேபோல வருகின்ற 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை டோக்கனில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் குறிப்பிட்ட நாளில் பொதுமக்கள் பொங்கல் தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை டோக்கனில் குறிப்பிட்ட நேரம், நாள் பார்த்து பொதுமக்கள் நேரடியாக சென்று பொங்கல் தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம். அதேபோல 13ஆம் தேதிக்குள் பொங்கல் தொகுப்பு பெற முடியாதவர்கள் 14ஆம் தேதி பொங்கல் தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம்  என தமிழக அரசு தெரிவித்துள்ளது.