மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி, ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வரும் சூழலில், இப்போது ஜூலை மாதத்துக்கான அகவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்து ஊழியர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதோடு தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்குரிய அகவிலைப்படி 42 சதவீதமாக இருக்கும் சூழலில், மேலும் 4% உயர்த்தப்பட்டு அகவிலைப்படி 46 சதவீதமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தையும் உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளமும் உயர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு அகவிலைப்படி அடுத்த ஜனவரி மாதத்தில் மீண்டுமாக 4% உயர்த்தப்பட்டு 50 சதவீதமாக இருந்தால் வீட்டுவாடகை படித் தொகையும் 3 சதவீதமாக உயரும். இதன் காரணமாக  ஒரே நேரத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, அடிப்படை சம்பளம் மற்றும் வீட்டு வாடகை படி ஆகிய மூன்றும் உயர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.