பயோஃபோர் இந்தியா எனும் மருந்து நிறுவனம் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. கடந்த 2007-ஆம் வருடம் நிறுவப்பட்ட இந்நிறுவனமானது சர்வதேச மருந்து நிறுவனங்களுடன் இணைந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கன்னாபிடியோல் வாய்வழிக் கரைசலை தயாரிக்க மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதியை பெற்று இருப்பதாக பயோஃபோர் இந்தியா நிறுவனம் அறிவித்து உள்ளது.

கன்னாபிடியோலைப் பயன்படுத்தி வாய் வழியாக அருந்தக்கூடிய மருந்து கரைசலை (Cannabidiol Oral Solution 100 mg/ml) தயாரிக்கவும், அதை விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளது. இந்தியாவில் முதன் முறையாக கன்னாபிடியோல் சார்ந்த ஒரு மருந்து பொருளுக்கு மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அங்கீகாரம் வழங்கி உள்ளது. இம்மருத்துக்கு அனுமதி கோரி அமெரிக்க மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையத்திலும் விண்ணப்பிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.