தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் மின் கட்டணம் அதிக அளவு கணக்கிடப்பட்டு வருவதாக தொடர்ந்து மக்கள் மத்தியில் இருந்து புகார்கள் எழுந்துள்ளது. ஆளே இல்லாத வீட்டிற்கு கூட 2000 ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் கணக்கிடப்படும் சம்பவங்களும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் ஆத்தங்கரை பள்ளிவாசல் அருகே தோட்ட விலையை சேர்ந்த பாண்டி என்பவரின் வீட்டுக்கு இதுவரை மின் கட்டணம் நூறு யூனிட்டுக்கும் குறைவாக உள்ளது.

ஆனால் இந்த முறை இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக அறிந்த மின்வாரிய உயர் அதிகாரி சந்திரசேகர் மின்கரம் கேட்டில் தவறு உள்ளதாகவும் அது சரி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இது போன்ற பல சம்பவங்கள் தமிழகத்தில் தற்போது நிகழ்ந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.