தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தவர் ரமணி. இவரை மதன் குமார் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் ரமணி அவரது காதலுக்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பள்ளியில் ஆசிரியர் அறையில் ரமணி அமர்ந்திருந்த போது அங்கு வந்த மதன் குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆசிரியையின் கழுத்தில் குத்தி தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் ரமணியை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் உயிரிழந்து விட்டார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.