இந்தியாவில் விலை ஏற்றம் காரணமாக சந்தைகளில் கோதுமை மாவு பற்றாக்குறை நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு பாரத் ஆட்டா  என்ற பெயரில் மானிய விலையிலான கோதுமை மாவு விற்பனையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதில் ஒரு கிலோ கோதுமை மாவு 27.50 ரூபாய் ஆகும். முதல் கட்டமாக நடமாடும் விற்பனை மையங்களிலும் மற்ற கூட்டுறவு அமைப்பின் கீழ் செயல்படும் கடைகளிலும் இந்த பாரத் ஆட்டா  மாவு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.