கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு அருகே ஒரு பகுதியில் ஐஸ்வர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாகலகுண்டே பகுதியில் ஒரு அழகு நிலையம் வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி நவீன் என்ற கணவர் இருக்கும் நிலையில் இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதில் ஐஸ்வர்யா தன்னுடைய கணவரின் நடத்தையில் அடிக்கடி சந்தேகப்பட்டு அவருடன் பிரச்சனை செய்துள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக நவீன் தன் மனைவியிடம் கூறாமல் சுற்றுலா சென்றுள்ளார்.

பின்னர் அவர் வீடு திரும்பிய நிலையில் ஒரு வாரமாகவே ஐஸ்வர்யா தன் கணவரிடம் சண்டை போட்டுள்ளார். இதில் நேற்று காலை ஐஸ்வர்யா மிகுந்த கோபத்திலிருந்த நிலையில் தன்னுடைய அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதாவது அவருடைய கணவர் தர்மஸ்தாலாவுக்கு சென்றுள்ளார். அவர் அங்கு ஒரு பெண்ணுடன் சென்றதாக நினைத்த ஐஸ்வர்யா தகராறு செய்து மன வருத்தத்தில் இருந்துள்ளார். இதன் காரணமாகத்தான் அவர் தற்கொலை செய்து கொண்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும்இது  தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..