கடைசி விவசாயி மற்றும் குட்நைட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ரேச்சல் ரெபேக்கா. இவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில், நான் 2008 ஆம் ஆண்டு கல்லூரியில் படித்த போது என்னை ஒருவர் ஒருதலையாக காதலித்தார்.

நான் மறுத்ததால் என் வீட்டிற்கு வந்து துருப்பிடித்த கத்தியால் 16 முறை கொடூரமாக குத்தினான். அக்கம் பக்கத்தினர் எனக்கு ரத்தம் கொடுத்த காப்பாற்றினர். என்னுடைய உடம்பில் பல பேரின் ரத்தம் ஓடிக்கொண்டிருக்கிறது. அப்போது முதலே பலருக்கு என்னால் முடிந்த உதவிகளை நான் செய்து வருகிறேன் என்று அவர் உருக்கமாக பேசியுள்ளார்.