தெலுங்கானா மாநிலம் ஜகித்யாலா மாவட்டம் லகலமர்ரியை சேர்ந்த புப்பாலா மம்தா , ஒரே நேரத்தில் ஐந்து அரசு வேலைகளைப் பெற்றுள்ளார். இவர் BEd, M. Com முடித்துள்ள நிலையில் குருகுல ஆட்சேர்ப்பு தேர்வில் பட்டப் படிப்பு விரிவுரையாளர், வணிகவியல் துறையில் இளநிலை விரிவுரையாளர், சமூகப் பிரிவில் PGT, TGT பணிகளுக்கும் தேர்வாகியுள்ளார்.

இதனைத் தவிர tnpsc தேர்வில் நகராட்சி துறையில் இளநிலை கணக்கு அதிகாரியாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பட்ட விரிவுரையாளராக சேர்ந்து மாணவர்களுக்கு சேவை செய்வேன் என்றும் அவர் கூறியுள்ளார். அவரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.