இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பதவி விலக வேண்டுமெனவும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதியை கண்டித்தும் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன் பாஜகவினர் தர்ணா போராட்டம் நடத்தினர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு,  ஒட்டுமொத்த சனாதனத்தையும் எதிர்க்கவில்லை. சனாதனத்தின் சில கொள்கைகளைத்தானஎதிர்க்கிறோம் என்று சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

என் மண் என் மக்கள் பயணம் தோல்வி அடைந்ததால் அண்ணாமலை குழம்பிப் போயுள்ளார். வேண்டும் என்றே சிலர் அரசை குறை சொல்லிக் கொண்டு இருக்கின்றனர். அரசு திட்டங்கள் மக்களிடம் சென்றதால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்றார்.