வீட்டு வசதி வாரியத்தின் வீட்டை முறைகேடாக ஒதுக்கிய வழக்கில் ஐ.பெரியசாமியை கீழமை நீதிமன்றம் விடுவித்ததை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. பொன்முடியை போல், ஐ.பெரியசாமி-க்கு 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால், அவரது எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவி உடனே பறிபோகும். இதனால், இந்த தீர்ப்பு மீது அனைவரும் கவனமும் திரும்பியுள்ளது.