ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை லலித் மோடி அறிமுகப்படுத்தினார். இவர் மீது பல்வேறு ஊழல் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இதனால் இந்திய புலனாய்வு விசாரணை முகமிகளில் தேடப்படும் பட்டியலில் அவர் வைக்கப்பட்டு இருக்கிறார். இவர் மீது  20-கும் மேற்பட்ட வழக்குகள் அதாவது, நிதி முறைகேடு மற்றும் குற்ற வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் லலித் மோடிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு அவர் 24 மணி நேரமும் பிராணவாயு சிகிச்சை எடுத்துக் கொள்வதாக சமூக ஊடகத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று மற்றும் ஆழ்ந்த நிமோனியா பாதிப்பும் காணப்படுகிறது என அவர் கூறியுள்ளார். இதற்காக மெக்சிகோ நாட்டில் மூன்று வாரங்களிலும், அதன் பின் இங்கிலாந்தின் லண்டன் நகரில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் இதற்காக இரண்டு மருத்துவர்களுக்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டார். அவர்களின் உதவியுடன் தனது மகனின் ஆதரவுடன் லண்டன் விமான வழியே கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார். கடந்த வருடம் ஜூலை மாதம் லலித் மோடி instagram பக்கத்தில் கூறியதாவது, 10 வருட வயது வித்தியாசம் உள்ள நடிகை சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு எனது துணையான சுஷ்மிதா சென்னுடன் என்னுடைய புதிய வாழ்க்கையை தொடங்குகிறேன். நான் அவரை காதலிக்கிறேன். அதே சமயம் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. விரைவில் சுஷ்மிதா சென்னுடன் திருமணம் நடைபெறும் என அவர் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கதாகும்.