இத்தாலியின் ட்ரைஸ்டே (Trieste) நகர வீதிகளில் பகல் வேளையில் பெண் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்படும் அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று எக்ஸ் (X) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகி உலகளவில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் அபயக்குரல் எழுப்பிக் கத்தியபோதும், அங்கிருந்தவர்கள் நேரில் வந்து உதவாமல் தூரத்திலிருந்து வேடிக்கை பார்க்கும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன. இந்தச் சம்பவம் ஐரோப்பிய நகரங்களின் பொதுப் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு குறித்த காரசாரமான விவாதங்களை இணையத்தில் கிளப்பியுள்ளது.
🇮🇹 In Trieste, Italy, an illegal migrant was filmed sexually assaulting a woman in broad daylight right on the street
The migrant pinned an Italian woman down while she screamed for help.
Police are still trying to identify the assailant. pic.twitter.com/AYI6buhXaX
— Visegrád 24 (@visegrad24) May 26, 2026
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட நபரை அடையாளம் காண உள்ளூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், ஆபத்தான சூழலில் மக்கள் நேரில் உதவாமல் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் “பைஸ்டாண்டர் எஃபெக்ட்” (Bystander effect) மனநிலை குறித்தும், ஆபத்தில் இருந்த பெண்ணைக் காப்பாற்றாமல் வீடியோ எடுத்த நபருக்கு எதிராகவும் நெட்டிசன்கள் தங்களின் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த வைரல் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் நீதிக்கான பெரும் குரலாக மாறியுள்ளது.
