சமூக வலைதளங்களில் வேடிக்கையான வீடியோக்கள் எப்போதும் பரவி மக்களை சிரிக்க வைக்கின்றன. அப்படி ஒரு வீடியோவில், குரங்குகளின் புத்திசாலித்தனமும், குழுவாக செயல்படும் திறமையும் பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் ஒரு நபர் திறந்தவெளியில் பிக்னிக் செய்து, உணவு உண்ணும் போது, திடீரென ஒரு கூட்டம் குரங்குகள் அவரது உணவின் மீது பாய்கின்றன. இந்தக் காட்சி, குரங்குகள் ஒரு திருட்டு கும்பல் போல முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுவது போல உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எக்ஸ் தளத்தில் @SonaliKiSuno என்ற கணக்கில் இந்த வீடியோ பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.

வீடியோவில், முதலில் ஒரு குரங்கு மெதுவாக வந்து மேஜையில் இருந்த ரொட்டியை திருடி ஓடுகிறது. அந்த நபர் அதைப் பிடிக்க முயல்கையில், அவர் கவனம் திசை திருப்பப்பட, மற்றொரு குரங்கு சரியான நேரத்தில் ஆப்பிளை எடுத்து தப்பிவிடுகிறது. இப்படி ஒவ்வொரு குரங்கும் ஒரு பொருளை எடுக்க, அந்த நபர் திகைத்து, என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார். அவரது பரிதவிப்பான முகமும், குரங்குகளின் சாமர்த்தியமும் பார்ப்பவர்களை சிரிக்க வைக்கிறது. இந்தக் காட்சி ஒரு நகைச்சுவை படத்தைப் போல இருப்பதாகவும், குரங்குகள் ஒரு சரியான திட்டத்துடன் செயல்பட்டதாகவும் மக்கள் கருத்து கூறுகின்றனர்.