கன மழை காரணமாக ஐபிஎல் இறுதி போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 11 மணிக்கு முன்பு மழை நிற்காமல் பெய்ததால் ஐபிஎல் இறுதிப் போட்டி இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் டிக்கெட்டுகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று அகமதாபாத் மைதானத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருந்து ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று மழை தொடராமல் இருந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் அணியும் இறுதி போட்டியில் மோத உள்ளனர்.