ஆரணி அருகே சாமிக்கு படைக்கப்பட்ட 7 வடைகள் ரூ.30,000க்கு ஏலம் விடப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரணி அருகே ஆடிபுரத்தை முன்னிட்டு ஆதிபராசக்தி ஆலயத்தில் வெறும் கைகளால் கொதிக்கும் எண்ணெயில் மூன்று பூசாரிகள் வடை சுட்டார்கள்.   இந்த செயலை பக்தர்கள் ஆச்சர்யமாக கண்டுகளித்தனர்.  இந்த வடை ஏலம் விடப்பட்டது. அதன்படி, ஒரு வடையின் விலை 100 ரூபாய்க்கு ஆரம்பமாகி அதிகபட்சமாக 7000 ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

அதன்படி, ஏழு வடைகள் ஏலம் விடப்பட்டது முதல் வடை 7000 ரூபாயும் இரண்டாவது வடை 4500 மூன்றாவது வடை 3700 ரூபாய்க்கு விலை ஏலம் விடப்பட்டுள்ளது. மொத்தம் ஏழு வடையின் ஏலத்தொகை 30,000 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. மேலும், இந்த வடையை உட்கொண்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதிகமாக உள்ளது.