இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிய பிளான்களையும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பல திட்டங்களையும் வழங்கி வருகிறது. அதன்படி அன்லிமிடெட் டேட்டா தேவைப்படும் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல்லின் புதிய 99 ரூபாய் டேட்டா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஒரு நாள் வேலிடிட்டியை மட்டும் வழங்க கூடியது.

இந்த திட்டத்தின் மூலம் 30 ஜிபி டேட்டாவை நீங்கள் பெற முடியும். ஒரு நாளுக்கு மட்டும் உங்களின் அன்லிமிடெட் டேட்டா தேவைப்பட்டால் இதனை தேர்வு செய்யலாம். 24 மணி நேரத்திற்குள் அதிகபட்சமாக 30 ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு மேல் டேட்டாவை பயன்படுத்தினால் இணைய வேகம் 64 கே பி பி எஸ் ஆக குறைக்கப்படும். இந்த பிளானில் அழைப்பு மற்றும் செய்தி அனுப்பும் வசதிகள் கிடையாது. ஒருவேளை airtel வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தில் தங்களின் பகுதியில் 5g சேவையை பெற்று இருந்தால் வரம்பற்ற 5g டேட்டாவை பயன்படுத்திக் கொள்ள முடியும்.