மக்களவை இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 26 ஆம் தேதி அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்குவங்கம் மற்றும் ஜம்மு & காஷ்மீர்  உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளுக்கும் நடைபெற உள்ளது. இதனால் அந்த மாநிலங்களில் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள மது கடைகளும் இரண்டு நாட்களுக்கு மூடப்படும்.