கர்நாடகாவில் புதிய ரேஷன் கார்டு பெறுவதற்கு பலரும் விண்ணப்பித்துள்ள நிலையில் இந்த விண்ணப்பங்கள் மார்ச் 31ஆம் தேதிக்குள் பரிசீலனை செய்யப்பட்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்யப்படும் என உணவுத்துறை அறிவித்துள்ளது. முதல் கட்டமாக முன்னுரிமை ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

புதிய முன்னுரிமை ரேஷன் கார்டு பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். வருகின்ற மார்ச் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முன்னுரிமை ரேஷன் கார்டு பெறுவதற்கு கர்நாடகாவில் வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் வருமானத்தின் அடிப்படையில் ரேஷன் கார்டு வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் https://ahara.kar.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.