ஏப்ரல் 1 முதல் புதிய வரி முறையின் கீழ் 7 லட்சம் ரூபாய் வரை வரி செலுத்தக்கூடிய சம்பளம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கும் பிஎப் நடைமுறையின் படி இனி நீங்கள் வேறு நிறுவனத்திற்கு வேலை மாற்றம் செய்யும்போது பிஎப் தொகையை மாற்ற கோர வேண்டியதில்லை. அது தானாகவே மாறிவிடும்.

ஏப்ரல் 1 முதல் உங்களுடைய வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள பாஸ்டாக் கணக்கின் கேஒய்சி சரிபார்ப்பை வங்கியில் நீங்கள் புதுப்பிக்காமல் இருந்தால் மார்ச் 31ஆம் தேதிக்கு பிறகு kyc இல்லாத பாஸ்டாக் கணக்கு வங்கியால் முடக்கப்படும். அதில் பேலன்ஸ் இருந்தாலும் உங்களால் பணம் செலுத்த முடியாது.