சிவகங்கை மாவட்ட முன்னாள் நகர் மன்ற தலைவரும் காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு பொது செயலாளர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டம் கல்லல் டாஸ்மாக் கடைக்கு பின்புறம் போலி மதுபான கடை பல நாட்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உதவி போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதாவது டாஸ்மாக் நிறுவன நிர்வாகத்திற்கு தெரியாமல் டாஸ்மாக் கடைக்கு பின்புறம் ஒரு கடை எப்படி இவ்வளவு நாட்கள் செயல்பட முடிந்தது டாஸ்மாக் நிர்வாகம் எந்தவித புகாரும் செய்யவில்லை.

அதேபோல் டாஸ்மாக் நிர்வாகத்தில் எத்தனை கண்காணிப்பு அதிகாரிகள், பறக்கும் படை அதிகாரிகள், மண்டல மேலாளர், அலுவலக கண்காணிப்பு குழுக்கள் இருந்தும் ஏன் போலி மதுபான கடையை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் மாவட்ட கலெக்டர் இதில் தலைமை ஏற்று இதனை கண்காணிக்க தவறி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.