பிஎஸ்என்எல் நிறுவனம் தமிழகம் முழுவதும் டிசம்பர் 7ஆம் தேதி(இன்று) முதல் டிசம்பர் 13-ம் தேதி வரை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளும் விதமாக பிஎஸ்என்எல் மொபைல்களை மின் ஏலம் மூலம் விற்பனை செய்யும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் தங்கள் செல்போன் எண்களாக பேன்சி எண்களை பெறுவதற்கு www.eauction.bsnl.co.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். ஏலம் எடுப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 13 . பெரும்பாலானவர்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்களுடைய செல் ஃபோன் நம்பர் எழுதி நினைவில் வைத்துக் கொள்ளவும் என்று தான் நினைப்பார்கள்.

அப்படிப்பட்டவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் eauction.bsnl.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று லாகின் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதில் தற்போதைய செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிட்டு உள் நுழைவு விவரங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். அதன் பிறகு காட்டப்படும் பிரீமியம் எண்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.