ஒடிசா மாநிலம் கன்ஜம் மாவட்டத்திலுள்ள பெர்ஹாம்பூர் நகரில் வீட்டில் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தபோது 52 வயது பெண்ணுக்கு தீ விபத்தில் உடலில் 50% தீக்காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மேல் சிகிச்சை செய்ய பணமில்லாததால் அப்பெண்ணின் கணவர் அவரை வீட்டிற்கு அழைத்து வந்து அவ்வப்போது சிகிச்சை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று உடல் அசைவின்றி இருந்ததால் மனைவி இறந்துவிட்டதாக கூறி இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை செய்து உறவினர்களுடன் மயானத்திற்கு எடுத்து சென்றுள்ளார் கணவர். அப்போது எரியூட்ட ஏற்பாடுகள் செய்யும்போது அந்த பெண் கண்விழித்து பேசியுள்ளார். இதனால் அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாயினர். இதனையடுத்து அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.