எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜனவரி 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

விருதுநகர், காரைக்குடி, மானாமதுரை, தென்காசி, பட்டுக்கோட்டை வழியாக எர்ணாகுளம்- வேளாங்கண்ணி ரயில் நிலையங்களுக்கு இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு முறையில் ஜனவரி முதல் வாரம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பயணிகள் வசதிக்காக தற்போது இந்த ரயில் சேவை ஜனவரி 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி எர்ணாகுளம் -வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் ஜனவரி 7, 14 போன்ற சனிக்கிழமைகளில் எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்று சேருகிறது. அதேபோல் மறுமார்க்கத்தில் வாராந்திர சிறப்பு ரயில் ஜனவரி 8, 15 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் வேளாங்கண்ணியில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும் என தெற்கு ரயில்வே சார்பில் கூறப்பட்டுள்ளது.