மதுரை மாவட்டத்திலுள்ள சின்ன குக்கி குளம் பகுதியில் விஜய் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐடி ஊழியர். இவர் களாக டேக் வாண்டோ என்ற கொரிய தற்காப்பு கலையை கடந்த சில வருடங்களாக கற்று வருகிறார். இவர் டேக் வாண்டோ மூலம் கற்களை குறைந்த நிமிடத்தில் கையால் உடைத்து பல சாதனைகளை புரிந்துள்ளார். இவர் இதுவரை 32 முறை சாதனை புத்தக பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது அவர் புதிய முயற்சியாக 29 எரியும் சிமெண்ட் கான்கிரீட் கற்களை அடுத்தடுத்து 30 வினாடிகளில் உடைத்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் அவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவில் குறைந்த நிமிடத்தில் எரியும் கற்களை உடைத்து சாதனை படைத்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். மேலும் இதற்கு முன்பு பாகிஸ்தானை சேர்ந்த முகமது இம்ரான் என்பவர் 25 எரியும் கான்கிரீட் கற்களை உடைத்து சாதனை படைத்திருந்த நிலையில் அவருடைய சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.