சமூக வலைதளங்களில் அனைத்து பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்த நடிகர் சித்தார்த் தற்போது அமைதியாக இருப்பது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த், யோகி பாபு, திவ்யான்ஷா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘டக்கர்’. இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சித்தார்த், “இப்போது என்னை நம்பி இவ்வளவு படங்கள், தயாரிப்பாளர்கள் இருப்பதால் சமூக வலைதளங்களில் அமைதியாகி விட்டேன்.

சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைத்து உழைத்து கொண்டிருக்கிறேன்” என்று கூறினார். சித்தார்த் நடிப்பில் டக்கர் திரைப்படம் ஜூன் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.