இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் சில வீடியோக்கள் பார்ப்பதற்கு பயமாகவும் ஆச்சரியமாகவும் இப்படி கூட நடக்குமா என்ற விதத்தில் எண்ணக்கூடிய வகையில் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது வாலிபர் ஒருவர் மரத்தின் அடியில் இருக்கும் நிலையில் அவரது சட்டைக்குள் ஒரு பெரிய விஷப்பாம்பு நுழைந்துவிட்டது.

அவரது சட்டைக்குள் எப்படி பாம்பு நுழைந்தது என்பது தெரியாத நிலையில் அவர் ஆடாமல் அசையாமல் இருக்க உடனடியாக அவரது பட்டனை கழட்டுகிறார்கள். அப்போது பாம்பு வெளியே நின்று தலையை நீட்டுகிறது. பின்னர் அவரது பட்டனை கழட்டிய நிலையில் அந்தப் பாம்பை அங்கிருந்து அமைதியாக வெளியேற்றினர். அவரது சட்டையிலிருந்து பாம்பு அமைதியாக வெளியேறி சென்றது. அதிஷ்டவசமாக அந்த நபரை பாம்பு கடிக்கவில்லை என்பது தான் ஒரே ஒரு நல்ல விஷயம். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.