பொதுவாகவே எந்தவொரு வீட்டிலும் மாமியார் மருமகள் சண்டை என்பது இல்லாமல் இருக்கவே இருக்காது. ஒருசில குடும்பங்களில் மட்டுமே சண்டை போடாமல் இருப்பார்கள் என்று சொல்லலாம். இந்த மாமியார் மருமகள் சண்டையில் ஒரு சில கொலை சம்பவங்களும் சமீபகாலமாக அரங்கேறி வருவதை நாம் செய்திகளாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

இந்நிலையில் கேரளா மாநிலம் பாலராமபுரத்தில் பெண் ஒருவர் ஆண் வேடத்தில் தனது மாமியாரை கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தன் கணவர் தினமும் குடித்துவிட்டு தன்னை அடிப்பதற்கு மாமியார் தான் காரணம் என கருதி மருமகள் மாமியாரின் காலை உடைத்துள்ளார். கால் உடைந்த மாமியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் மருமகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற மாமியார் மருமகள் அடிதடி சண்டை காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடுத்தக்கது.