இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கார் விருதை வென்று இந்தியாவுக்கே பெருமை சேர்த்தவர் ஆவார். இவர் தற்போது தென்னிந்திய படங்களுக்கு அதிகம் இசையமைத்து வருகிறார். அத்துடன் ஐஸ்வர்யா ரஜினியின் லால் சலாம் உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.  இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏப்.28ம் தேதி வெளியாக உள்ள படம் பொன்னியின் செல்வன் 2. இந்த படத்தின் PS Anthem நேற்று வெளியானது.

இதன் வெளியீட்டு விழாவில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான்,”நான் என்னுடைய வாழ்க்கையில் கல்லூரிக்கே போனது கிடையாது. ஆகையால் எந்த கல்லூரிக்கு கூப்பிட்டாலும் நான் மிகவும் உற்சாக மடைந்து விடுவேன். இன்றைய மாணவர்கள்தான் நாளைய எதிர்காலம்” என தெரிவித்தார். இதை கேட்ட ரசிகர்கள் ஏ.ஆர்.ரஹ்மான்  கல்லூரி படிக்கவில்லையா என்று ஷாக்கில் உள்ளனர்.