நடிகர் பிரித்திவிராஜ் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து பிரபலமானவர். கிட்டத்தட்ட 100 படங்களுக்கும் மேல் பல கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாக இருக்கிறார். தமிழில் இவர் நடித்த அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. கடைசியாக இவர் காவியத்தலைவன் என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் இயக்குனர் பிரசாத் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடித்திருக்கிறார்.

பேன் இந்தியா அளவில் அதிக எதிர்பார்ப்போடு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கான டப்பிங் கலெக்ஷன் வேலைகள் முடிந்திருப்பதாக பிரித்விராஜ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.  அதில், படத்திற்கான இறுதி டப்பிங் வேலைகள் முடிந்துள்ளது. எத்தனை வருடங்களாக பல மொழிகளில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் அனைத்திற்குமே நான் எனது குரலை கொடுத்து வலு சேர்த்து இருக்கிறேன். பல மொழிகளில்  என்னுடைய கதாபாத்திரங்களுக்கு நானே டப்பிங் பேசியிருக்கிறேன். ஆனால் ஒரே கதாபாத்திரத்திற்கு ஒரே படத்திற்கு ஐந்து வெவ்வேறு மொழிகளில் டப்பிங் செய்வது இதுதான் முதல் முறை.தெலுங்கு கன்னடா தமிழ் ஹிந்தி மேலும் மலையாளம் ஐந்து மொழிகளுக்கும் நானே டப்பிங் பேசி இருக்கிறேன்  என்று பதிவிட்டுள்ளார்.