சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வசூல் செய்த திரைப்படம் தான் அனிமல். இந்த திரைப்படத்தில் ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் சுமார் 650 கோடிக்கு மேல் வசூலித்து பல சாதனைகளை குவித்து வருகிறது. இந்த நிலையில் அனிமல் திரைப்படத்தில் ரன்பீருடன் வரும் நெருக்கமான காட்சிகளில் நான் நடித்ததற்கு என் பெற்றோர் வருந்தினார்கள் என்று நடிகை திருப்தி டிம்ரி கூறியுள்ளார்.

நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், நான் எந்த தவறும் செய்யவில்லை. ஒரு நடிகையாக என் கதாபாத்திரத்திற்கு 100% உண்மையாக இருக்க வேண்டும். ஜோயா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அதையே நான் செய்தேன் என்று அவர்களுக்கு புரிய வைத்தேன் என மனம் திறந்து பேசியுள்ளார்.