தென் இந்திய திரையுலகில் பிரபல பாடகியாக வலம் வரக்கூடிய ரக்ஷிதா சுரேஷ், மலேசியாவில் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பயணித்துக்கொண்டிருந்த கார் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. இவர் தெலுங்கு, கன்னடம், இந்தி, தமிழ் படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். இந்நிலையில் ரக்ஷிதா சுரேஷ் கார் விபத்தில் சிக்கியதாக தன் சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது “நேற்று பெரிய விபத்தில் சிக்கினேன்.

நேற்று காலை மலேசிய விமான நிலையத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது சாலையில் இருந்த டிவைடரில் கார் பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் என் மொத்த வாழ்க்கையும் அந்த 10 வினாடிக்குள் தன் கண்முன்னே தோன்றியது. நானும், காரை இயக்கி வந்த டிரைவரும் உடன் பயணித்த மற்றொருவரும் லேசான காயங்களோடும் சிறு உட்காயங்களோடும் பாதுகாப்பாக இருக்கிறோம் என நினைக்கும்போது கொஞ்சம் நிம்மதியாக உள்ளது’ என பதிவிட்டுள்ளார்.