ஒரு தாய் தனது குழந்தைக்காக எதையும் செய்யத் தயங்கமாட்டாள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அது மனிதர்களுக்கே அல்ல, விலங்குகளிடமும் தாய்மையின் அன்பு மற்றும் தியாகம் எவ்வளவு ஆழமானது என்பதை காட்டும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

20 வினாடிகள் நீளமான அந்த வீடியோவில், சில சிங்கங்கள் ஒரு எருமையையும் அதன் கன்றையும் துரத்துவது காணப்படுகிறது. சிங்கங்கள் நெருங்கியதும், தாய் எருமை தன் கன்றை காப்பாற்றும் பொருட்டு அவற்றை எதிர்கொள்கிறது. சில நொடிகளில் சிங்கங்கள் எருமையை கீழே  தள்ளி தாக்கத் தொடங்குகின்றன. கடைசியில், தாய் எருமை தப்பிக்க முடியாமல் உயிரிழக்கிறது. அதற்கிடையில் தன் தாய் விழும் காட்சியை பார்த்த கன்று அதிர்ச்சியில் அங்கேயே நின்றுவிடுகிறது. பின்னர், மூன்றாவது சிங்கம் வந்து அந்த கன்றையும் இரையாக மாற்றுகிறது.

 

இந்த வீடியோவை ட்விட்டர் (X)  @TheeDarkCircle என்ற பயனர் பகிர்ந்துள்ளார். இதுவரை 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதைக் கண்டு அதிர்ச்சி மற்றும் இரக்கத்துடன் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். ஒரு பயனர், “தாயின் அன்பை விட பெரியது எதுவுமில்லை; ஆனால் காட்டு வாழ்க்கையின் சட்டங்கள் மிகவும் கடினமானவை” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “இதைக் காணும் போது கண்களில் கண்ணீர் வந்தது, ஆனால் இதுவே இயற்கையின் உண்மை” என பதிவு செய்துள்ளார். மேலும் இயற்கையின் கடினமான சட்டங்களுக்குள் கூட, ஒரு தாயின் தியாகம் எவ்வளவு பெரிதாக இருப்பது இந்த வீடியோ மீண்டும் நினைவூட்டுகிறது.