“எனது சொத்து மதிப்பு 117 சதவீதம் உயர்ந்துள்ளது என்பதை நிரூபித்தால், அரசியல் விட்டு விலகுகிறேன்” என்று பாஜக தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை அதிரடியாக அறிவித்துள்ளார். கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து மதிப்பு வெளியாகியிருந்தது.

இதையடுத்து வீட்டு வாடகை கூட நண்பர்கள்தான் கட்டுகிறார்கள் என்று கூறிய அண்ணாமலைக்கு எப்படி கோடிக்கணக்கில் சொத்து வந்தது என நெட்டிசன்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு அண்ணாமலை இவ்வாறு பதிலளித்துள்ளார். வாட்சப் மெசேஜ் வைத்து கேள்விகள் கேட்கக்கூடாது என கூறியுள்ளார்.