நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து இவருடைய நினைவிடத்திற்கு சென்று திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் நினைவிடத்தில், நடிகை ராதா மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

“கல்யாண பத்திரிகை வைக்கும் போது அவரை பார்க்க முடியவில்லை. அவ்வளவு கஷ்டத்திலும், என் மகள் கல்யாணத்திற்கு பிரேமலதா வந்தார்கள். அது மிகப்பெரிய விஷயம். கேப்டனை இப்படியொரு இடத்தில் பார்ப்பேன் என கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை” என கண்ணீர் விட்டு கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.