விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமான ஆழமான பிணைப்பை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனது குடும்பத்தினர் விற்க முயன்ற வளர்ப்பு எருமை மாட்டைப் பிரிய மனமில்லாமல், சிறுவன் ஒருவன் கண்ணீருடன் போராடும் காட்சி இணையவாசிகளைக் கலங்கச் செய்துள்ளது. இன்ஸ்டாகிராமில் ‘@ghantaa’ என்ற பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், பெரியவர்கள் எருமை மாட்டை விற்பனை செய்வது குறித்துப் பேசிக் கொண்டிருக்கும்போது, அந்தச் சிறுவன் எருமையைக் கட்டியணைத்துக் கொண்டு “என்னால் இதை விட முடியாது” என்று கதறி அழுவது பதிவாகியுள்ளது.
குடும்பத்தினர் கயிற்றை அவிழ்க்க முயன்றபோது, அவர்களைத் தடுத்து சிறுவன் ஆவேசமாக சத்தமிட்டது அவன் அந்த விலங்கு மீது வைத்திருந்த எல்லையற்ற அன்பைப் பிரதிபலிப்பதாக அமைந்தது.
டிசம்பர் 29-ஆம் தேதி பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ, இதுவரை 1.15 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. சிறுவனின் செயலைக் கண்டு சிலர் புன்னகைத்தாலும், பலரும் ஒரு செல்லப்பிராணியைப் பிரிவதிலுள்ள வலியை உணர்ந்து நெகிழ்ந்து போயுள்ளனர்.
<a href=”http://
View this post on Instagram
“>
“இது கலப்படமில்லாத தூய அன்பு” என்றும், “அந்தச் சிறுவனின் இதயம் பலரது மனதைத் தொட்டுள்ளது” என்றும் இணையவாசிகள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். நெட்டிசன்கள் பலரும் அச்சிறுவனின் அழுகையை அவனது பிடிவாதமாகப் பார்க்காமல், தனது பிரியமான உயிரினத்தைப் பறிகொடுத்துவிடுவோமோ என்ற அச்சத்தினால் எழுந்த உண்மையான பாசமாகவே கருதுகின்றனர்.
