அரசியலில் தீவிரமாக இருப்பதால் தனது அம்மாவை பார்த்தே இரண்டு மாதங்களாகி விட்டதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் பேசிய அவர், “அரசியலில் விடுமுறை எடுத்ததே இல்லை. ஓய்வில்லாமல் பணியாற்றி வருகிறேன். எனது அம்மா உள்ளிட்ட உறவினர்களை வேலை பளுவால் சந்திக்க முடியவில்லை. தமிழகத்தில் இந்த முறை மாற்றத்தை ஏற்படுத்தியாக வேண்டும். எனவே கடுமையாக உழைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது” என்றார்.